முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வாவேற்பு பெற்றதோடு, அதில் பங்கேற்ற பலரை மக்களிடம் பெரும் பிரபலமாக்கியது. இதில், ஏற்கனவே மக்களுக்கு தெரிந்த முகங்கள் சிலர் கலந்துக் கொண்டாலும், ஓரளவே தெரிந்த, யார் என்பதே தெரியாதே, சிலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எளிமையாக சென்றடைந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் போட்டியாளர்கள் பங்கேற்றாலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு கிடைத்திருக்கும் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு பல விதத்தில் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
சினிமா வாய்ப்பு, விளம்பர பட வாய்ப்பு, கடை திறப்பு என்று ரொம்ப பிஸியாக இருக்கும் பிக் பாஸ் பிரபலங்கள், தனி தனியாக தங்களது சேவையை செய்துக் கொண்டிருக்க, தனியார் நிறுவனம் ஒன்று அவர்களை மொத்தமாக வளைத்திருக்கிறது.
ஓவியா, ஜுலி, சினேகன், ரைஸா, சுஜா வாருணி ஆகியோரை வைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனம், அதற்காக இவர்களிடம் அதிரடியான அக்ரிமெண்ட் ஒன்ரையும் போட்டுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதுவரை எந்த காரணத்திற்காகவும் இவர்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட எந்த வெளிநாட்டுக்கும் செல்லக்கூடதாம்.
இந்த அக்ரிமெண்டால், திரைப்படம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கூட முடியாமல், இந்த பிக் பாஸ் பிரபலங்கள் கைதிகளைப் போல கட்டுப்பட்டு இருக்கிறார்களாம். இவர்கள் இப்படி கட்டுப்பட்டு இருக்க, அந்த நிறுவனம், மிகப்பெரிய தொகையை இவர்களுக்கு வழங்கியதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் - துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்- சுற்றுலா பயணிகள்- விருந்தினர்கள்- நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் 'பாந்தர்ஸ் ஹப் ' ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2 ஐந்திணை உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்...
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...