விஜயை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்ததாக ‘மெர்சல்’ படத்தை இயக்கியனார். இப்படங்கள் கதை சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அட்லீ தனது அடுத்த படத்திலும் விஜயுடன் தான் இணையப் போகிறார் என்றும், அப்படம் ‘மெர்சல் 2’ ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்த பிறகே அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதற்கு முதலில் ஓகே சொன்ன அட்லீ, பிறகு முருகதாஸ் படம் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் வேறு ஒரு ஹீரோவுடன் இணையும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து தனது அடுத்த படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்திற்கு கதை எழுதுகிறாராம். இவர் தான் ‘மெர்சல்’ படத்திற்கும் கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாஹா படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், அட்லீயின் நெருக்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் - துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்- சுற்றுலா பயணிகள்- விருந்தினர்கள்- நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் 'பாந்தர்ஸ் ஹப் ' ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2 ஐந்திணை உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்...
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...