விஜயிடம் இருந்து விலகிய அட்லீ - வேறு ஹீரோவுடன் இணைந்தார்
Wednesday December-27 2017

விஜயை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்ததாக ‘மெர்சல்’ படத்தை இயக்கியனார். இப்படங்கள் கதை சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அட்லீ தனது அடுத்த படத்திலும் விஜயுடன் தான் இணையப் போகிறார் என்றும், அப்படம் ‘மெர்சல் 2’ ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

 

இதற்கிடையே, விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்த பிறகே அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதற்கு முதலில் ஓகே சொன்ன அட்லீ, பிறகு முருகதாஸ் படம் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் வேறு ஒரு ஹீரோவுடன் இணையும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து தனது அடுத்த படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்திற்கு கதை எழுதுகிறாராம். இவர் தான் ‘மெர்சல்’ படத்திற்கும் கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது சாஹா படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், அட்லீயின் நெருக்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Related News

1639

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery