பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள தாடி பாலாஜி, தற்போது முன்னணி டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த பல மாதங்களாக தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக காவல் நிலையம், நீதிமன்றம் என்று இருந்த தாடி பாலாஜி, தற்போது மனைவி மற்றும் தனது குழந்தையை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.
தாடி பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தாடி பாலாஜி மீது அவரது மனைவி பல புகார்களை தெரிவிக்க, தாடி பாலாஜியும் அவர் மனைவி மீது பல புகார்களை தெரிவித்தார். தற்போது இருவரும் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள். தாடி பாலாஜியின் மனைவி பேஷான் ஷோ, நிகழ்ச்சி நடத்துவது என்று பிஸியாகி விட்டார்.
இந்த நிலையில், குழந்தைகள் பங்கேகும் கிங்ஸ் ஆஃப் காமெடி டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தாடி பாலாஜி, அதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசிய போது, ”இவர்களை பார்க்கும் போது என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன்” என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார்.
பாலாஜியின் இத்தகைய நிலையைப் பார்த்து அந்த செட்டில் இருந்தவர்கள் அவர் மீது பரிதாபப்பட்டனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...