நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், தனது காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதோடு, அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சந்தோஷமடைந்து வர, ஸ்ருதியின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான சரிகா பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ருதியின் அம்மா சரிகா கடந்த நவம்பர் மாதம் தன் தாயை இழந்தார். அதற்கு பின் அவருக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
மராட்டிய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான சரிகா, தான் சம்பாதித்த பணத்தில் தன் அம்மா மூலம் பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் அவரின் அம்மா இறப்பதற்கு முன் இந்த சொத்தை தன் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரின் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டாராம். விசயம் தெரிந்த சரிகா பெரும் அதிர்ச்சியாகியுள்ளார்
சொந்த வீடு இல்லாமல் தவித்ததோடு, நீதிமன்றத்தில் சொத்து வழக்குக்காக அலைந்தார். இந்நிலையில் இவரது தோழியான நுஸ்ஸத் தன் அண்ணனான நடிகர் அமீர் கானிடம் விசயத்தை சொல்லியிருக்கிறார்.அமீர்கான் அவருக்கு உதவி செய்துள்ளார்.
தற்போது தங்க வீடு இல்லாமல் இருக்கும் சரிகா, ஸ்ருதி வாங்கியுள்ள வீட்டில் தான் தங்கியிருக்கிறாராம்.
தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் - துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்- சுற்றுலா பயணிகள்- விருந்தினர்கள்- நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் 'பாந்தர்ஸ் ஹப் ' ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2 ஐந்திணை உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்...
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...