‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இதற்கு முன்பு ‘சென்னை 28 - 2’ இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற ‘சொன்னசுந்தரி...” பாடல் பெரும் ஹிட்டானது.
இந்த நிலையில், ”சொப்பன்சுந்தரி..” பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை மனிஷா யாதவ், வெங்கட் பிரபு தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த பாடலை ஐட்டம் பாடல் என்று சொல்லாமல், அவரை ஆட வைத்துவிட்டாராம். இது குறித்து கூறிய மனிஷா யாதவ், “நான் கேட்டபோது ”இது ஸ்பெஷல் பாடல். படத்தின் கதையில் முக்கிய ட்விஸ்ட் இந்த பாடல்” என வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். ஆனால் தற்போது நான் வெளியில் சென்றால் என்னை சொப்பன சுந்தரி என கூப்பிடுகிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் சில டயலாக்குகள் தவறாக போனதால் என்னை பற்றி மக்கள் தவறாக பேசுகின்றனர்.” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...