ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த், இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், ”ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.
ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும்.
பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டும் என்று அவசியமில்லை.
மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். உங்களைப் போலவே சிறுவயதில் நடிகர் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன்.” என்று தெரிவித்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...