வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அப்படங்களின் படப்பிடிப்புக்கு அவ்வபோது பிரேக் கிடைப்பதால் இடையில் வேறு சில படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க உள்ள தனுஷ், இப்படத்திற்கு பிறகு ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ராஜ்கிரனை வைத்து தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மீண்டும் படம் இயக்கும் முடிவு உள்ள தனுஷ், இந்த படத்தை ஆக்ஷன் படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...