வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அப்படங்களின் படப்பிடிப்புக்கு அவ்வபோது பிரேக் கிடைப்பதால் இடையில் வேறு சில படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க உள்ள தனுஷ், இப்படத்திற்கு பிறகு ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ராஜ்கிரனை வைத்து தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மீண்டும் படம் இயக்கும் முடிவு உள்ள தனுஷ், இந்த படத்தை ஆக்ஷன் படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...