AAA படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயந்து வரும் நிலையில், மணிரத்னம் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மணிரத்னம் படத்தில் பல ஹீரோக்கள் நடிக்க, அதில் ஒருவர் தான் சிம்பு என்பதால், மணிக்கு பெரிய அளவில் பாரமாக சிம்பு இருக்க மாட்டார்.
ஆனால், மணிரத்னம் படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் ஒருவர் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தான் மோகன் ராஜா. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ என்று அடுத்தடுத்த மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் மோகன் ராஜா, அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இசை சம்மந்தமான கதை களத்தை கொண்ட படமாம்.
இது குறித்து சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மோகன் ராஜா, விரைவில் அதிகாரப்பூர்வமாக இப்படம் குறித்த தகவலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...