AAA படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயந்து வரும் நிலையில், மணிரத்னம் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மணிரத்னம் படத்தில் பல ஹீரோக்கள் நடிக்க, அதில் ஒருவர் தான் சிம்பு என்பதால், மணிக்கு பெரிய அளவில் பாரமாக சிம்பு இருக்க மாட்டார்.
ஆனால், மணிரத்னம் படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் ஒருவர் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தான் மோகன் ராஜா. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ என்று அடுத்தடுத்த மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் மோகன் ராஜா, அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இசை சம்மந்தமான கதை களத்தை கொண்ட படமாம்.
இது குறித்து சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மோகன் ராஜா, விரைவில் அதிகாரப்பூர்வமாக இப்படம் குறித்த தகவலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...