தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், தொலைக்காட்சி நடிகை திவ்யாவை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே.சுரேஷ், திவ்யாவை அறிமுகப்படுத்தி வைத்தார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பத்திரிகைகளும் திருமணம் நின்று விட்டதாக செய்திகளை வெளியிட்டுவிட்டனர். ஆனால், இதற்கு ஆர்.கே.சுரேஷ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமணம் நின்று போனதற்கு காரணம் இருவரது ஜாகத்திலும் சில பிரச்சினைகள் இருக்கிறதாம். அதற்காக தான் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்ததில், ஜாகத்தில் பிரச்சினை இருப்பது உண்மை தான், அதற்காக திருமணத்தை நிறுத்தவில்லை என்றும், தள்ளிவைத்திருக்கிறோம், அடுத்த ஆண்டு திருமணம் குறித்து அறிவிப்போம், என்று ஆர்.கே.சுரேஷ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...