தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா, பொது மக்களுக்கான கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொழில்நுட்பமும், நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்திலும் கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிவறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை முற்றிலுமாக குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை கோண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, கழிப்பறை கட்டுவதற்காக அரசு செய்து கொடுக்கும் உதவிகள் குறித்தும் எடுத்துறைத்து வருகின்றன.
அந்தவகையில் குறைந்த செலவில் கழிவறை கட்டுவதற்கான முயற்சிகளை யுனிசெப் அமைப்பு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுனிசெப் அமைப்பு, சென்னையை அடுத்துள்ள திருப்போரூரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கழிவறை கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா, இதில் பங்கேற்று செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...