தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாலும், அவரை வளர்த்தது என்னவோ தெலுங்கு ரசிகர்கள் தான். பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்து மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கினார்.
’மாநகரம்’, ’சரவணன் இருக்க பயமேன்’, ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்று ரெஜினாவுக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியானாலும், அவரால் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரெஜினா பெரிதும் நம்பியிருந்தாலும், அப்படத்தின் ரிலீஸாவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், என்னதான் தெலுங்கில் அதிக சம்பளத்துடன் அதிகமான பட வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுள் உள்ள ரெஜினா, அதற்காக தெலுங்கில் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தமிழ்ப் படங்களுக்கு வாங்கும் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறாராம்.
தற்போது, இந்த ஆஃபரை முன் வைத்து தான் கோடம்பாக்கத்தில் பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...