தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாலும், அவரை வளர்த்தது என்னவோ தெலுங்கு ரசிகர்கள் தான். பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்து மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கினார்.
’மாநகரம்’, ’சரவணன் இருக்க பயமேன்’, ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்று ரெஜினாவுக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியானாலும், அவரால் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரெஜினா பெரிதும் நம்பியிருந்தாலும், அப்படத்தின் ரிலீஸாவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், என்னதான் தெலுங்கில் அதிக சம்பளத்துடன் அதிகமான பட வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுள் உள்ள ரெஜினா, அதற்காக தெலுங்கில் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தமிழ்ப் படங்களுக்கு வாங்கும் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறாராம்.
தற்போது, இந்த ஆஃபரை முன் வைத்து தான் கோடம்பாக்கத்தில் பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...