ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொண்டு சில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது போலவும், நடிகர் தனுஷின் உண்மையான பெற்றோர்கள் தாங்கள் தான் என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருப்பது போல, 27 வயது இளைஞர் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று கூறியுள்ளார்.
உலக அழகி பட்டத்தை வென்று உலகத்தின் பார்வையை தன் மீது பட வைத்த ஐஸ்வர்யா ராய், தற்போது பாலிவுட்டின் மகாரணியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் 44 வயதான ஐஸ்வர்யா ராயை தாய் என்று கூறும் அந்த 27 வயது இளைஞர் பாலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து அந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது தந்தை விசாகப்படிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி, ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். அதன் பின் இரண்டு வருடங்கள் லண்டனில் ஐஸ்வர்யா ராயுடன் வசித்தேன். தற்போது தாய் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...