விஜய் தந்தை மீது போலீஸ் வழக்கு பதிவு!
Sunday December-31 2017

கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் மெர்சல் படத்திற்கு எதிராக சர்ச்சை குறித்து பதில் அளித்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு கருத்துக்களையும், பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார்.

 

மேலும், திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அவர், ”திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது. சாமிக்கு காணிக்கை கொடுத்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாரும் தேர்வுக்கு போக வேண்டாம், உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

 

எஸ்.ஏசந்திரசேகரின் இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 'மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசியதாக எஸ்.ஏ.சி மீது நான் புகார் அளித்தும் போலீசிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

 

இதை விசாரித்த நீதிபதி புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சென்னை விருகம்பாக்கம் போலீசார் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related News

1682

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery