நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமூக பிரச்சியமை மையமாக வைத்து உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கியிருந்தார்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து இயக்குநர் கோபி நயினாரிடம் கேட்டதற்கு, தனது அடுத்த படம் குறித்து சித்தார்த்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானதும் படம் குறித்த தகவல்களை வெளியிடுவோம், என்று தெரிவித்தார்.
மேலும், சித்தார்த்தை வைத்து இயக்க இருக்கும் படம் ‘அறம்’ இரண்டாம் பாகம் அல்ல. ‘அறம்’ இரண்டாம் பாகம் நயந்தாராவை வைத்தே இயக்கப்படும். சித்தார்த்தை வைத்து இயக்குவது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும், என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...