வேலைக்காரன் படத்தை நிறுத்த பஞ்சாயத்து - வருத்தத்தில் சிவகார்த்திகேயன்!
Tuesday January-02 2018

மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வேலைக்காரன் படத்திற்கு எதிராக நடைபெற்ற பஞ்சாயத்து குறித்து கூறியுள்ளார்.

 

”சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது. ரெட் கார்டு என்ற கான்செப்ட் எனக்கு புரியவில்லை. ஒருவரை வேலை செய்யவிடாமல் ஷூட்டிங்கை நிறுத்தினால் எப்படி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

 

வேலைக்காரன் ஷூட்டிங் முதல் நாள் அன்று ஷூட்டிங் நடக்கவிடவில்லை. நான் கொடுத்த சில கமிட்மெண்டுகள் தொடர்பாக இரவு முழுவதும் பஞ்சாயத்து நடந்தது. அப்போது நான் கமிட்மென்ட் கொடுக்காத இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் படம் செய்யவேண்டும் என கூறினார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை”, என்று தெரிவித்தார்.

Related News

1693

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery