சிம்புக்காக எழுதிய கதையில் சூர்யா!
Tuesday January-02 2018

’நானும் ரவுடி தான்’ படத்தின் புகழ் விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

 

சூர்யாவின் 36 வது படமான இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். வரும் பொங்கல் பண்டிகையன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் கதையை செல்வராகவன் சிம்புவுக்காக எழுதினாராம். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை இயக்க இருந்தார். சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் கதையை தான் சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளாராம்.

Related News

1694

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery