புதிய அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தனது கட்சியில் தொண்டர்களை சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், இதுவரை தான் தவறாக நடந்துக் கொண்டிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், என்று கூறினார்.
மேலும், ஆன்மீக அரசியலுக்கான விளக்கம் அளித்தவர், “ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது என்று கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
ரஜினியின் பாபா சின்னத்தில் தாமாரை இருப்பதால், அவர் பா.ஜ.க-வின் கை பாவை என்று பலர் விமர்சித்து வருன் நிலையில், பாபா சின்னத்தில் இருந்த தாமரையை ரஜினிகாந்த் நீக்கியுள்ளார்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...