விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘மெர்சல்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி “ஆளப்போறான் தமிழன்...” என்ற ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், இப்பாடல் வெளியீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...