Latest News :

ரஜினிகாந்த் கட்சியில் இணையும் இலங்கை நிறுவனத்தின் மூத்த அதிகாரி!
Wednesday January-03 2018

ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சியில் நடிகர்கள் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ், ரஜினியை பின் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது குறித்த தகவலை நாளை அவர் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜு மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லைகா நிறுவனம்தான் ரூ. 450 கோடி செலவில் எந்திரன் 2 படத்தை அதாவது 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இவரது தீவிர ரசிகராக இருப்பவர் ராஜூ மகாலிங்கம். இவர் ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Related News

1705

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery