Latest News :

ரஜினிகாந்த் கட்சியில் இணையும் இலங்கை நிறுவனத்தின் மூத்த அதிகாரி!
Wednesday January-03 2018

ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சியில் நடிகர்கள் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ், ரஜினியை பின் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது குறித்த தகவலை நாளை அவர் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜு மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லைகா நிறுவனம்தான் ரூ. 450 கோடி செலவில் எந்திரன் 2 படத்தை அதாவது 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இவரது தீவிர ரசிகராக இருப்பவர் ராஜூ மகாலிங்கம். இவர் ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Related News

1705

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery