ரஜினிகாந்த் கட்சியில் இணையும் இலங்கை நிறுவனத்தின் மூத்த அதிகாரி!
Wednesday January-03 2018

ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சியில் நடிகர்கள் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ், ரஜினியை பின் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது குறித்த தகவலை நாளை அவர் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜு மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லைகா நிறுவனம்தான் ரூ. 450 கோடி செலவில் எந்திரன் 2 படத்தை அதாவது 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இவரது தீவிர ரசிகராக இருப்பவர் ராஜூ மகாலிங்கம். இவர் ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Related News

1705

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery