தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் என சினிமாத் துறையில் இரண்டு பொருப்புகளை வகிக்கும் விஷால், விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட முயன்றார்.
ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அவரால் போட்டியிட முடியவில்லை. இருந்தாலும் ஆர்.கே.நகர் மக்களுக்காக நான் பணிபுரிவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஷால், அவருக்காக தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி அறிவித்துள்ளார். தலைவன் அரசியலில் இறங்கிவிட்டார். அரசியல் என்பதும் ஒரு சமூக சேவை தான். நான் அவருக்கு ஒரு நல்ல தொண்டனாக ரோட்ல இறங்கி அவர் போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் செய்வேன். எப்போதும், அவருக்கு உதவியாக இருப்பேன்.” என்று தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கமல் என இருவரும் அரசியலுக்கு வந்தால் ஆதரவு யாருக்கு? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ”அரசியல் என்று வந்தால் கமல்ஹாசனுக்கு தான் என் ஆதரவு” என்று விஷால் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...