ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரண்டு நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பித்த முத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இதற்கிடையே, அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திப்பு நிகழ்ச்சியின் போது மேடையில், இதே முத்திரையை பதித்திருந்தார். மேலும் ரசிகர்களை அவர் சந்தித்த போது இதே முத்திரையை காண்பித்ததால், ரசிகர்கள் இந்த முத்திரையைக் கொண்டு கொடி பேட்ச் போன்றவற்றை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்தின் சின்னம் இதுவாகத்தான் இருக்கும், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள நிறுவனம் ஒன்று, ரஜினிகாந்தின் முத்திரையை சொந்தம் கொண்டாடியுள்ளது. மேலும், இது தொடர்பாக அந்நிறுவனத்தை சேர்ந்த யாஷ் மிஸ்ரா என்பவர் ரஜினிகாந்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...