திருமணமான 2வது வாரத்தில் டிடி செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
Monday January-08 2018

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலில் நிற்பது அதிகரித்து வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

திவ்யதர்ஷினி என்ற டிடி பிரபல தொகுப்பாளர் மட்டும் இன்றி பல பிரபலங்களுடன் நெருக்கமாகவும் பழகி வருகிறார். இதற்கிடையே, இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் டிடியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கினார்கள். இது குறித்த தகவல்கள் வெளியானாலும், டிடி தரப்பிலும், ஸ்ரீகாந்த் தரப்பிலும் இது குறித்து எந்தவித மறுப்போ விளக்கமோ அளிக்கப்படவில்லை.

 

இதற்கிடையே, கடந்த ஆண்டு விவாகரத்து கோடி டிடி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன் பிறகு டிடி-யின் திருமண வாழ்க்கை கசந்தது குறித்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

 

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய டிடி, சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இது ஸ்ரீகாந்த் குடும்பதாருக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. மேலும், இரவு பார்ட்டிகளில் கலந்துக்கொள்வதையும் டிடி தொடர்ந்ததே ஸ்ரீகாந்த் அவரை பிரிய காரணம் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், சமீபத்தில் வந்த தகவலில், திருமணமான 2 வது வாரத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன், என்று டிடி கிளம்பிவிட்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியான ஸ்ரீகாந்த் குடும்பத்தார், டிடி யை கண்டித்தார்களாம். ஆனால், அவர்களை எதிர்த்து பேசிய டிடி, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைடில் கார்டில் தனது பெயரை செல்வி டிடி என்று போட சொல்ல, தனுஷும் அதை அப்படியே செய்தாராம்.

 

டிடி-யின் இதுபோன்ற நடவடிக்கையால் வேதனை அடைத்த ஸ்ரீகாந்த், பாடகி சுசீத்ர வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் டிடி யை பிரியும் முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related News

1743

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery