Latest News :

திருமணமான 2வது வாரத்தில் டிடி செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
Monday January-08 2018

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலில் நிற்பது அதிகரித்து வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

திவ்யதர்ஷினி என்ற டிடி பிரபல தொகுப்பாளர் மட்டும் இன்றி பல பிரபலங்களுடன் நெருக்கமாகவும் பழகி வருகிறார். இதற்கிடையே, இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் டிடியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கினார்கள். இது குறித்த தகவல்கள் வெளியானாலும், டிடி தரப்பிலும், ஸ்ரீகாந்த் தரப்பிலும் இது குறித்து எந்தவித மறுப்போ விளக்கமோ அளிக்கப்படவில்லை.

 

இதற்கிடையே, கடந்த ஆண்டு விவாகரத்து கோடி டிடி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன் பிறகு டிடி-யின் திருமண வாழ்க்கை கசந்தது குறித்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

 

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய டிடி, சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இது ஸ்ரீகாந்த் குடும்பதாருக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. மேலும், இரவு பார்ட்டிகளில் கலந்துக்கொள்வதையும் டிடி தொடர்ந்ததே ஸ்ரீகாந்த் அவரை பிரிய காரணம் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், சமீபத்தில் வந்த தகவலில், திருமணமான 2 வது வாரத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன், என்று டிடி கிளம்பிவிட்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியான ஸ்ரீகாந்த் குடும்பத்தார், டிடி யை கண்டித்தார்களாம். ஆனால், அவர்களை எதிர்த்து பேசிய டிடி, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைடில் கார்டில் தனது பெயரை செல்வி டிடி என்று போட சொல்ல, தனுஷும் அதை அப்படியே செய்தாராம்.

 

டிடி-யின் இதுபோன்ற நடவடிக்கையால் வேதனை அடைத்த ஸ்ரீகாந்த், பாடகி சுசீத்ர வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் டிடி யை பிரியும் முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related News

1743

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery