ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு, பலருக்கு முதல்வர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது. இதையடுத்து கமல், ரஜினி, விஷால் ஆகியோர் நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், அதிமுக-வின் ஆதரவாளாரான கே.பாக்யராஜ் திடீரென்று திமுக-வுக்கு தனது ஆதரவை தெரிவித்தவர். சில ஆண்டுகளுக்கு பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்ததோடு, அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேரடி அரசியலில் தான் ஈடுபடப் போவதாக சமீபத்தில் அறிவித்த கே.பாக்யாஜ், அரசியலில் இறங்கினால் அதிமுக-வில் இணைவேன், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அவரின் பக்தனாக, கட்சியை வீழ்ச்சியடைய விடாமல் இருக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...