தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘ஷில்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பகதி பாசில், சமந்தா, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நதியா, திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார்.
முதலில் கதையை கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன நதியா, பிறகு கதையை கேட்டதும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி, படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. நதியாவுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...