தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘ஷில்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பகதி பாசில், சமந்தா, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நதியா, திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார்.
முதலில் கதையை கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன நதியா, பிறகு கதையை கேட்டதும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி, படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. நதியாவுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...