தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள நயந்தாரா, தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருபவர், ஹீரோக்களுடன் ஜோடி போட புதிய கண்டிஷன் போட்டுகிறாராம்.
அதாவது, கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ரொமான்ஸாக நடிக்க மாட்டேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று கூறுபவர் இதற்கு சம்மந்தம் என்றால் கால்ஷீட் கொடுக்க ரெடி என்கிறாராம்.
நயந்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் வெற்றி பெற்றதால் நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் நயந்தாரா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் சிம்ஹா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நயந்தாரா, அப்படத்திலும் குறைவான ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...