Latest News :

தனது புடவைகளை விற்று பிள்ளைகளை வளர்த்த சீரியல் நடிகை!
Friday January-19 2018

சினிமா மற்றும் சீரியலில் பிரபல நடிகையாக இருக்கும் பலர் தங்களது வாழ்க்கையில் பெரிதும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் மிகப்பெரிய சோகத்திலும், வறுமையிலும் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

 

‘சித்தி’, ‘மெட்டி ஒலி’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் அம்மா வேடங்களில் நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் படுத்த இவர், சாந்தி வில்லியம்ஸ் ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துவிட்டார்.

 

அப்போது மிகவும் கஷ்ட்டப்பட்ட சாந்தி வில்லியம்ஸ், தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க ரொம்ப சிரமப்பட்டவர், தன்னிடம் இருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தாராம். பிறகு ராதிகா மூலம் ‘சித்தி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் அப்படியே பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததால் வறுமையில் இருந்து விடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இருந்தாலும், தனது கணவர் இறந்ததை மட்டும் அவரால் இன்னும் தாங்க முடியவில்லையாம்.

Related News

1797

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery