சினிமா மற்றும் சீரியலில் பிரபல நடிகையாக இருக்கும் பலர் தங்களது வாழ்க்கையில் பெரிதும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் மிகப்பெரிய சோகத்திலும், வறுமையிலும் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
‘சித்தி’, ‘மெட்டி ஒலி’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் அம்மா வேடங்களில் நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் படுத்த இவர், சாந்தி வில்லியம்ஸ் ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துவிட்டார்.
அப்போது மிகவும் கஷ்ட்டப்பட்ட சாந்தி வில்லியம்ஸ், தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க ரொம்ப சிரமப்பட்டவர், தன்னிடம் இருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தாராம். பிறகு ராதிகா மூலம் ‘சித்தி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் அப்படியே பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததால் வறுமையில் இருந்து விடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், தனது கணவர் இறந்ததை மட்டும் அவரால் இன்னும் தாங்க முடியவில்லையாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...