தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினா காசண்ட்ரா, தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் ரொம்பவே மும்முரம் காட்டி வருகிறார். அதற்காக, சம்பளத்தை குறைத்துக் கொண்டவர், கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
’சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ரெஜினா போதைக்கு அடிமையாகிவிட்டதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதுவும் ஒரு படத்திற்காக தான்.
ஆம், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அவே’ என்ற தெலுங்குப் படத்தில் போதைக்கு அடிமையான பெண் வேடத்தில் ரெஜினா நடித்து வருகிறாராம். இதில் காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மூன்று இளம் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசும் இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று ரெஜினா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...