விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரன் ஆகியோரது நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சண்டைகோழி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டைகோழி-2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷாலின் 25 வது படமான இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லியில் மதுரையை செட் மூலம் உருவாக்கும் பணியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 10 ஏக்கர் நிலபரப்பில், 500 கடைகள், கோவில், திருவிழா கொண்டாட்டம் என அழகான மதுரையை ரூ.6 கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கியுள்ளார்கள்.
இதற்கான பூஜை இன்று காலை பின்னி மில்லில் நடைபெற்றது. இதில், விஷால் பிலிம் பேக்டரி இணை தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகானந்தம், இயக்குநர் என்.லிங்குசாமி, கலை இயக்குநர் ராஜீவன் ஆகியோர் கலந்துக்கொண்டு பணியை தொடங்கி வைத்தார்கள்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...