தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மு.களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார். 17 வயது இளைஞரான இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிபாஸ்கர் பாடல்கள் எழுத, எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்கிறார். மயில் கிருஷ்ணன் கலைத் துறையை கவனிக்க, லீ முருகன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை டி.ஜி.ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்.
முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இப்படத்தில், விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையில் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதையும் படத்தில் பதிவு செய்துள்ளார்களாம்.
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார். இதில் இயக்குநர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...