கடந்த சில காலங்களில் சென்னையில் பல பகுதிகளில் புதிய கிளைகளை திறந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிருவனம், நிறுவன விளம்பரங்களில் புதிய மாடல் ஒருவரை களம் இறக்கியும் வருகிறது. அவர் வேறு யாருமல்ல, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவண அருள் என்பவர் தான்.
ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் தோன்றி அவர் வசனம் பேச தொடங்கி தற்போது நடனம் ஆடுவதை வரை வந்துவிட்டார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற மலேசிய நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கோடி கணக்கில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியர், விரைவில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக உள்ளார்.
ஆம், சரவண அருள் விரைவில் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதற்காக, பலரிடம் கதை கேட்டு வரும் அவர், உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதையை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் விளையாட்டாக தான் ஹீரோவானால் ஜோடியாக நயந்தாராவை போடுவேன், என்று கூறியிருந்தார். அதுவே தற்போது நிஜமாகிவிடும் போலிருக்கிறது. அருள் தரப்பில் இருந்து நயந்தாராவிடம் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் நோ ரொமான்ஸ், நோ கிளாம்ஸ் என்ற கண்டிஷன்களை போட்டிருக்கும் நயந்தாராவுக்கு எத்தனை கோடிகளை கொட்டி கொடுத்தாலும் பரவாயில்லை அவரை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சரவண அருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நயந்தாரா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அருளுடன் விளம்பர படங்களில் நடித்த ஹன்சிகா, தமன்னா இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற மற்றொரு ஐடியாவும் அருளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
எது எப்படியோ, ரஜினி, கமல் சினிமாவில் விட்டுச் செல்லும் இடத்தை நிரப்புவதில் அண்ணாச்சி தீவிரமாக இருக்கிறார் என்பது உறுதி.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...