’நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதி ஹரிஹரன். கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ள இவர், தமிழில் ‘நிபுணன்’, ‘நிலா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் தான் குறைவான படங்கள் நடிப்பதற்கு காரணம், தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தது தான், என்று சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி ஹரிஹரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தயாரிப்பாளர் ஸ்ருதி ஹரிஹரனை ஒப்பந்தம் செய்யும் போது, ”நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம், நாங்கள் உன்னை பயன்படுத்திக் கொள்வோம், அதற்கு சம்மதமா” என்று கேட்டதாகவும், அதற்கு ஸ்ருதி, நான் எப்போதும் கையில் செருப்புடன் தான் இருப்பேன், என்று கூறியதாகவும் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்ப் படங்களின் வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் கூறினார்.
ஸ்ருதியை படுக்கைக்கு அழைத்த அந்த தயாரிப்பாளர் பிளஸ் அவரது கூட்டாளிகள் நான்கு பேய் யாராக இருப்பார்கள், என்று கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த தயாரிப்பாளர் சிக்கிக்கொண்டார்.
ஆம், வெளிநாட்டு உணவு பெயர் ஒன்றை பட தலைப்பாக வைத்து பெரிய வெற்றிக் கொடுத்த அந்த தயாரிப்பாளர் தான், ஸ்ருதியை படுக்கைக்கு அழைத்தவராம். கன்னடத்தில் வெற்றி பெற்ற ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்த அந்த தயாரிப்பாளர் அந்த படத்தில் தான் ஸ்ருதியை நடிக்கவ் ஐக்க முயற்சித்தார். ஆனால், திடீரென்று ஹீரோயின் மாற்றிவிட்டார்.
தொடர்ந்து புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வரும் அந்த தயாரிப்பாளர் தற்போது இயக்குநர் அவதாராமும் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில கடந்த ஆண்டு வெளியான படம் வெளியாவதில் பல பிரச்சினைகளை சந்தித்து வெளியானாலும், படம் வெற்றி பெறவில்லை. இதனால் சற்று சோகத்தில் இருக்கும் அந்த தயாரிப்பாளரின் பெயர் டேமஜ் ஆகும் அளவுக்கு நடிகையின் ஸ்ருதியின் ஸ்டேண்ட்மெண்ட் அமைந்துள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...