கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் விக்ரம், ஒரு படத்திற்காக இரண்டு மூன்று ஆண்டுகளை செலவிடுவார். ஆனால், அந்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அவரது உழைப்பும் வீணாகிவிடும். இதனால் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியவர் ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
அதன்படி, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், இடையே ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து அப்படமும் வெளியாகிவிட்டது. மேலும், கமல் தயாரிப்பில் ஒரு படம், வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு படம் என்று இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமும் போட்டுவிட்டார். ஆனால், இன்னமும் ‘துருவ நட்சத்திரம்’ படம் முடிந்தபாடில்லை.
முழு கதை இல்லாததால் இயக்குநர் கெளதம் மேனன் படத்தில் நடிப்பதை சூர்யா தவிர்த்து வந்த நிலையில், தான் விக்ரம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். தற்போது விக்ரமையும் அவர் காயவைத்துவிட்டாராம்.
க்ளைமாக்ஸை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கெளதம் மேனன் ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தயாரிப்பு தரப்பு பணம் இல்லாமல் கையை சொறிந்துக்கொண்டிருக்கிறதாம். இந்த இரண்டு காரணங்களால் துருவ நட்சத்திரம் இன்னும் முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ நட்சத்திரத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படங்களின் பணியில் ஈடுபட விக்ரம் தீவிரம் காட்டினாலும், க்ளைமாஸ் தெரியாத கெளதம் மேனன் மற்றும் பணம் இல்லாத தயாரிப்பு நிறுவனத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் நொந்து நூடுல்ஸாகி கொண்டிருக்கிறாராம்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...