தயாரிப்பாளர் கணேசன் என்பவர் நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.
”நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோவும் நடத்தி வருகிறேன். ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை. நான் ரூ.1.75 கோடி படத் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளேன். எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் என்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்க்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்” என்று கணேசன் புகாரில் தெரிவித்துள்ளார்.
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் விமல் மீது அளித்துள்ள இந்த புகாரால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...