கடந்த 2009 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரக்கனி - சசிகுமார் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
‘நாடோடிகள் 2’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயண், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார். ரமேஷ் எடிட்டிங் செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதிகிறார். திலீப் சுப்பராயண் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ், ஜானி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்க, தயாரிப்பு மேற்பார்வையை சிவசந்திரன் கவனிக்கிறார்.
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது பிற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...