தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றவர், தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சொகுசு கார் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று திடீரென்று அவரை கைது செய்தனர்.
அமலா பாலை கைது செய்த போலீசார் அவரிடம் சில மணி நேரம் தீவிரமாக விசாரணை மேற்கொண்அ நிலையில், அவர் பெயிலில் நேற்றே வெளியே வந்துவிட்டார்.
கேரளாவில் சினிமா நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்து சிக்கியிருக்கும் நிலையில், நடிகை அமலா பாலை மட்டும் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...