தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றவர், தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சொகுசு கார் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று திடீரென்று அவரை கைது செய்தனர்.
அமலா பாலை கைது செய்த போலீசார் அவரிடம் சில மணி நேரம் தீவிரமாக விசாரணை மேற்கொண்அ நிலையில், அவர் பெயிலில் நேற்றே வெளியே வந்துவிட்டார்.
கேரளாவில் சினிமா நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்து சிக்கியிருக்கும் நிலையில், நடிகை அமலா பாலை மட்டும் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...