தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றவர், தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சொகுசு கார் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று திடீரென்று அவரை கைது செய்தனர்.
அமலா பாலை கைது செய்த போலீசார் அவரிடம் சில மணி நேரம் தீவிரமாக விசாரணை மேற்கொண்அ நிலையில், அவர் பெயிலில் நேற்றே வெளியே வந்துவிட்டார்.
கேரளாவில் சினிமா நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்து சிக்கியிருக்கும் நிலையில், நடிகை அமலா பாலை மட்டும் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...