ஐதாராபாத்தில் நேற்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை தமன்னா மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடை திறப்பு விழாவுக்கு தமன்னா வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி எறிந்தார். சற்று குறிதவறி பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். கரிமுல்லா என்ற அந்த பட்டதாரி வாலிபர், சமீபகாலமாக தமன்னா நடிக்கும் படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் தான் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...