ஐதாராபாத்தில் நேற்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை தமன்னா மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடை திறப்பு விழாவுக்கு தமன்னா வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி எறிந்தார். சற்று குறிதவறி பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். கரிமுல்லா என்ற அந்த பட்டதாரி வாலிபர், சமீபகாலமாக தமன்னா நடிக்கும் படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் தான் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...