’புதிய பாதை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமான பார்த்திபன், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
நடிப்பு மற்றும் இயக்கம் என்று இருந்த பார்த்திபன், நடிப்பதை தவிர்த்துவிட்டு இயக்கம் மட்டும் செய்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதே போல், பிற இயக்குநர்களின் படங்களில் வில்லனாகவும் பார்த்திபன் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சமீபகாலமாக ரஜினிகாந்த், கமல், ஏ.ஆர்.ரஹ்மான் என்று சினிமாவின் முக்கிய தலைகளை பார்த்திபன் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.
பார்த்திபனின் இத்தகைய சந்திப்பு எதற்காக என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த ரகசியம் கசிந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் முடிவு ஆகியுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து வருகிறாராம்.
மணிரத்னம் இயக்கிய ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனா, மணிரத்னத்திடமே உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...