ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 62 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயை சந்தித்துவிட்டு வந்த பார்த்திபன்,
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!...
என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், அவர் ஏன் விஜயை சந்தித்தேன், என்பதை குறித்து எதுவும் பதிவிடவில்லை.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...