ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 62 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயை சந்தித்துவிட்டு வந்த பார்த்திபன்,
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!...
என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், அவர் ஏன் விஜயை சந்தித்தேன், என்பதை குறித்து எதுவும் பதிவிடவில்லை.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...