ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 62 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயை சந்தித்துவிட்டு வந்த பார்த்திபன்,
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!...
என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், அவர் ஏன் விஜயை சந்தித்தேன், என்பதை குறித்து எதுவும் பதிவிடவில்லை.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...