ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் லைகா நிறுவனம், விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளது. சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் இப்படம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இப்படம் அவரது 36 வது படமாகும். இப்படம் முடிந்த பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்ப தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் நடித்து வந்த சூர்யா, ஞானவேல்ராஜா ஏற்படுத்திய கடனால் வெளி நிறுவனப் படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...