’நாயகன்’ படத்தில் கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்த சரண்யா பொன்வண்ணன், ஹீரோயினாக நடித்த போது பெர்றாத புகழையும், பேரையும், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து பெற்றுவருகிறார்.
கிராமத்து அம்மா, அப்பாவித்தனமான அப்பா, வெகுளித்தனமான அம்மா உள்ளிட்ட எந்த வகையான அம்மா வேடமாக இருந்தாலும், தனது நடிப்பால் ஸ்கோர் செய்யும் சரண்யா, பொன்வண்ணன் கோடம்பாக்கத்தில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதே சமயம், நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், கூட ஒரு தொழிலையும் அவர் செய்து வருகிறாராம்.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பேஷன் டிசைனிங் ஸ்கூல் ஒன்றை சரண்யா நடத்தி வருகிறாராம். 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்களாம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சரண்யா, இந்த பள்ளியில் பாடம் நடத்துவதோடு, இந்த பள்ளியை தனது நேரடி கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...