ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து கடந்த பல நாட்களாக பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். யார் யாரோ, என்ன என்னவோ பேசி வைரமுத்துவுக்கு தெரிவித்த கண்டனத்தால், அவர் மட்டும் அல்ல அவரது குடும்பமும் வீட்டுக்குள் கதறி அழுதிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களை ஒரு கும்பல் வசைப்பாடியது.
இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை தவிர்த்து வந்த வைரமுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்ததோடு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதற்கான விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று நடைபெற்ற இவ்விழாவில், தொழிலதிபர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொள்ள, அவர்களது முன்னிலையில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வைரமுத்து வழங்க, அதே மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டவர்களில் ஒருவரான ‘சேலம் ஆர்.ஆர் பிரியாணி’ உணவகத்தின் உரிமையாளர், தனது சார்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார்.
அறிவித்தது மட்டும் இன்றி, மேடையிலேயே ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எழுதி, சம்மந்தப்பட்டவர்களிடம் அவர் கொடுத்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பல ஆண்டுகளாக தமிழால் பல கோடி சம்பாதித்த, சம்பாதித்து வரும் வைரமுத்து ரூ.5 லட்சம் கொடுக்க, சமீபத்தில் தனது தொழில் மூலம் வளர்ந்த ஒருவர் ரூ.10 லட்சம் கொடுத்தது, வைரமுத்துவை தலைகுனிய செய்துவிட்டது.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...