ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து கடந்த பல நாட்களாக பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். யார் யாரோ, என்ன என்னவோ பேசி வைரமுத்துவுக்கு தெரிவித்த கண்டனத்தால், அவர் மட்டும் அல்ல அவரது குடும்பமும் வீட்டுக்குள் கதறி அழுதிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களை ஒரு கும்பல் வசைப்பாடியது.
இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை தவிர்த்து வந்த வைரமுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்ததோடு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதற்கான விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று நடைபெற்ற இவ்விழாவில், தொழிலதிபர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொள்ள, அவர்களது முன்னிலையில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வைரமுத்து வழங்க, அதே மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டவர்களில் ஒருவரான ‘சேலம் ஆர்.ஆர் பிரியாணி’ உணவகத்தின் உரிமையாளர், தனது சார்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார்.
அறிவித்தது மட்டும் இன்றி, மேடையிலேயே ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எழுதி, சம்மந்தப்பட்டவர்களிடம் அவர் கொடுத்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பல ஆண்டுகளாக தமிழால் பல கோடி சம்பாதித்த, சம்பாதித்து வரும் வைரமுத்து ரூ.5 லட்சம் கொடுக்க, சமீபத்தில் தனது தொழில் மூலம் வளர்ந்த ஒருவர் ரூ.10 லட்சம் கொடுத்தது, வைரமுத்துவை தலைகுனிய செய்துவிட்டது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...