‘சகாப்தம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்தின் இளைமகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதுரவீரன்’. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு மற்றும் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.
இதற்கிடையே, நாளை தியேட்டர்களில் வெளியாகும் போதே, தயாரிப்பு தரப்பின் முறையான அனுமதியோடு இணையத்திலும் இப்படம் வெளியாவதாக இருந்தது. அதாவது, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மக்கள் இணையத்தில் பணம் கட்டி பார்க்கும் விதத்தில், இணையதளம் ஒன்று இப்படத்தை நாளை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்ததோடு, தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக்கு இது தொடக்கமாக இருக்கும், என்றும் வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், மதுரவீரன் படம் இணையத்தில் நாளை வெளியாகாது, என்று படத்தை வெளியிட இருந்த இணையதள நிறுவனம் திடீரென்று அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைய்ரங்கிலும் இணையத்திலும் ஒரே சமயத்தில் படம் வெளியாவதற்குத் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த முயற்சியை கைவிட்டதாகவும் அந்த இணையதள நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...