தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் பலர் தற்போது பிஸியானவர்களாக வலம் வருகிறார்கள். இதில் பலருக்கு பல சினிமா வாய்ப்பு கிடைத்தாலும், சிலர் கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்றும் பிஸியாக இருக்கிறார்கள்.
இதில் ஒருவரான வையாபுரி, தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும், இன்னும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பல இடங்களில் அவர் புலம்பி வருகிறார். வையாபுரி போனை எடுக்க மாட்டாரு, அவர் ரொம்ப பிஸியாக இருக்காரு, என்று பலர் சொல்லி வந்தாலும், அப்படி ஏதும் இல்லை, நான் என் வீட்டில் தான் இருக்கிறேன், ரொம்ப பிஸியாகவில்லை, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறேன், என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக்கொண்ட போது, அதில் பங்கேற்ற சக போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்ததும், நாம் ஒன்றாக சில சுற்றுலா தளங்களுக்கு சென்று வரலாம் என்று சொன்னார்களாம். ஆனால், தற்போது அவர்களிடம் இருந்து வையாபுரிக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். அவர் போன் செய்தாலும், யாரும் போனை எடுக்க மாட்ராங்களாம். இதனால் அவர் சற்று வருத்தமடைந்துள்ளதாகவும் கூறினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...