Latest News :

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டும் ஹீரோ!
Saturday February-03 2018

1991 ஆம் ஆண்டு கே.ஆர் இயக்கத்தில் வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவா. முதல் படம் கொடுத்த வெற்றியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர். பிறகு பட வாய்ப்புகள் இன்றி தொலைக்காட்சி தொடங்களில் நடித்து வந்தார். பிறகு அந்த வாய்ப்பும் பறிபோன நிலையில், ஆளே காணாமல் போய்விட்டார்.

 

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ள சிவா ‘துலாம்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி மூவிஸ் சார்பில் விஜய் விக்காஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ நாகஜோதி இயக்குகிறார். 

 

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படமாக உருவாகும் இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க, நாயகியாக டெப்லினா மற்றும் ஜாக்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்த்ரே ஆகியோரும் நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடித்திருக்கிறார்.

 

கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடியிருப்பதோடு, அதில் நடித்தும் இருக்கிறார். மேலும், நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியது இந்த படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பிரேம் நாத் இசையமைக்கும் இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

 

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related News

1916

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery