கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுடன் 25 செயற்குழு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
இந்த புதிய நிர்வாகிகள் குழு, சென்னையில் உள்ள நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல வகையில் நிதி திரட்டி வரும் இவர்கள் கட்டுமான பணியை தொடங்கியுள்ளனர். இந்த பணி இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் மே மாதத்தோடு முடிவடைவதால், மே மாதம் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வர உள்ளது. இதற்காக அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் கட்டிட பணி முடியாத காரணத்தால், இந்த தேர்தலிலும் விஷால் தலைமையிலான அணியினர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதே சமயம், ராதாரவி தலைமையிலான அணியினர் மீண்டும் விஷாலை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். சரத்குமார், வாகை சந்திரசேகர் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.
ஆனால், சரத்குமார், ராதாராவி ஆகியோரை சங்கத்தில் இருந்து நிக்கிவிட்டதால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விஷால் தரப்பு கூறி வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிட ராதாரவி தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது வழக்கு தொடர்வதற்கான பணியில் ராதாரவி ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...