விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. சிறுவர்கள், பெண்கள் என்று குடும்பம் குடும்பமாக இப்படத்தைக் காண ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருவதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே, சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படமான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் தெலுங்கு மட்டும் இன்றி இந்தி மற்றும் தமிழிலும் உருவாகிறது.
ஆக, இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியாகும் விஜய் சேதுபதி, அப்படியே பாலிவுட்டிலும் எண்ட்ரியாகிறார். தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ள இதில் விஜய் சேதுபதி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...