சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாகும் நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வபோது கலந்துக் கொள்கிறார்கள். அப்படி கலந்துக் கொண்ட நடிகை ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான சும்புல் கான், என்பவர் டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 25 வயதான இவர் பாகிஸ்தானில் பிரபலமான நடிகை ஆவார்.
பார்ட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பாடச்சொல்லி வற்புறுத்தியுள்ளது. அவர்கள் பல முறை வற்புறுத்தியும் சும்புல் கான் பாட மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்று தப்பியுள்ளது.
மூன்று பேரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸ், நயீம் கட்டாக் என்பவரை மட்டும் கைது செய்துள்ளது. அவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தகக்து.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...