சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாகும் நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வபோது கலந்துக் கொள்கிறார்கள். அப்படி கலந்துக் கொண்ட நடிகை ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான சும்புல் கான், என்பவர் டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 25 வயதான இவர் பாகிஸ்தானில் பிரபலமான நடிகை ஆவார்.
பார்ட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பாடச்சொல்லி வற்புறுத்தியுள்ளது. அவர்கள் பல முறை வற்புறுத்தியும் சும்புல் கான் பாட மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்று தப்பியுள்ளது.
மூன்று பேரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸ், நயீம் கட்டாக் என்பவரை மட்டும் கைது செய்துள்ளது. அவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தகக்து.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...