லட்சிய திமுக என்ற கட்சியை நடத்தி வரும் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், அவ்வபோது தமிழக அரசியல் குறித்து தனது விமர்சனங்களையும் தனது கட்சியின் சார்பில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். இருந்தாலும், தேர்தலில் மட்டும் அவர் சில ஆண்டுகளாக போட்டியிடவில்லை.
இந்த நிலையில், தனது மகன் நடிகர் சிம்புவை அரசியலில் களம் இறக்க டி.ராஜேந்தர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர், சிம்பு ரசிகர்களை ஒன்றுத்திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டி.ராஜேந்தரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “சிம்பு ரசிகர்களை ஒன்றுத்திரட்டப் போகிறோம். காத்திருந்து பாருங்கள்” என்றும் மட்டும் பதில் அளித்தார்.
ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடுவதை போல வளரும் நடிகரான விஷால் கூட அரசியலில் ஈடுபட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி அணியில் போட்டியிட்ட நடிகர் சிம்பு தோல்வியை தழுவிய நிலையில், தற்போது விஷாலுக்கு போட்டியாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...