மனைவிக்கு நோ சொன்ன உதயநிதி!
Tuesday February-06 2018

தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான உதயநிதி, தற்போது ஹீரொவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தனது சொந்த தயாரிப்பிலேயே நடித்து வந்த உதயநிதி, தற்போது பிற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

உதயநிதியின் மனைவி கிருத்திகா, ‘வணக்கும் சென்னை’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில், உதயநிதி தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “உங்கள் மனைவி படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை?” என்று கேட்கப்பட்டது. உடனே தனது மனைவிக்கு போன் செய்த உதயநிதி, அவரிடம், ”நீ ஏன் என்னை வைத்து படம் எடுக்கவில்லை” என்று கேட்டார். அதற்கு அவரோ ”தயாரிப்பாளர் கிடைக்கவில்லை” என்றார்.

 

மேலும், தயாரிப்பாளர் கிடைத்தால் படம் பண்ணலாம், என்று கூறிய கிருத்திகா “நான் முதலில் உங்களிடம் கூறிய கதையை தான் படமாக எடுப்பேன்” என்றும் கூறினார்.

 

அதற்கு உதயநிதி, அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன், அந்த கதையில் ஹீரோ ஆரம்பத்திலேயே இறந்துவிடுவார், என்று மனைவிக்கே நோ சொல்லிவிட்டார்.

Related News

1939

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery