தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான உதயநிதி, தற்போது ஹீரொவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தனது சொந்த தயாரிப்பிலேயே நடித்து வந்த உதயநிதி, தற்போது பிற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
உதயநிதியின் மனைவி கிருத்திகா, ‘வணக்கும் சென்னை’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், உதயநிதி தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “உங்கள் மனைவி படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை?” என்று கேட்கப்பட்டது. உடனே தனது மனைவிக்கு போன் செய்த உதயநிதி, அவரிடம், ”நீ ஏன் என்னை வைத்து படம் எடுக்கவில்லை” என்று கேட்டார். அதற்கு அவரோ ”தயாரிப்பாளர் கிடைக்கவில்லை” என்றார்.
மேலும், தயாரிப்பாளர் கிடைத்தால் படம் பண்ணலாம், என்று கூறிய கிருத்திகா “நான் முதலில் உங்களிடம் கூறிய கதையை தான் படமாக எடுப்பேன்” என்றும் கூறினார்.
அதற்கு உதயநிதி, அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன், அந்த கதையில் ஹீரோ ஆரம்பத்திலேயே இறந்துவிடுவார், என்று மனைவிக்கே நோ சொல்லிவிட்டார்.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...