இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட இளையராஜாவுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேரு துறையைச் சேர்ந்தவர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசியும் பெற்றுவருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோஸில் இளையராஜாவை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியன் பத்மவிபூஷன் விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர், அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கலையின் மூலம் ஒன்றிணைக்கும் விதமாக, தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பாக கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இளையராஜாவிடம் ஆலோசனை பெற வந்ததாகவும் கூறினார்.
முன்னதாக, அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனும் இளையராஜாவை சந்தித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...